நீலவான மேகமெங்கும்
இசை கானம் பாடி வீசும் தென்றலின் சாரலும்
நித்தமும் புல்லை முத்தமிடும் காலைபபொழுதின்
குளிர் பனித்துளிகளும்
மாசற்ற அன்பில் மலர்களை
கொஞ்சி உரசிடும் தேனீக்களும்
தெருவெங்கும் பூக்களை தூவி
வரவேற்றிடும் சாலையோர
வானுயர்ந்த மரங்களும்
காதோரம் தன்குரலில் இசை
மீட்டி மகிழும் கருங்குயிலும்
கருவிழி பார்வையில் தென்படும்
தோகை மயிலின் நடனமும்
பறந்து திரியும் பசுங்கிளியும்
பாய்ந்தோடும் கன்றுகளும்
சலசலவென நிற்காமல் ஓடி
சுற்றி வரும் நதிகளும்
மெதுவாய் செம்மண்ணை
நனைத்து செல்லும் மழையும்
சட்டென ஒளிரும் மின்னலும்
திடுக்கென ஒலிக்கும்
இடி முழக்கமும்
மழையில் நனைந்த
மண் வாசனையும் இலை
மீது தங்கிடும் நீர்துளிகளும்
மழை துளிகளை தட்டி
எண்ணிடும் கரங்களும்
இயற்கையின் மொழியை பேசிடுமே...
நன்றி - Ravikumar Saromi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்




0 Comments