அனுதினம் ஆயிரம் ஆசைகள்
ஆசையில் தோன்றிய கனவுகள்
கனவுகள் கருவறுக்கப்பட்ட கவலைகள்
கவலைகள் தந்த காயங்கள்
காயங்கள் தந்த அனுபவங்கள்
அனுபவங்களாய் ஒலித்த அசரீரிகள்
அதனை அடுக்கடுக்காய்
சுமந்து கொண்டு ஆழ்மனம்
திக்கு தெரியா திட்டங்களோடு
கட்டுப்பாடற்ற கட்டுமரமாய்
தனித் தீவில் மாட்டிக் கொண்டு
சிறு மனித வாழ்க்கை அலை மோதுகிறது.
நன்றி - ஹேமா தனசேகர்.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments