சில தருணங்களில்
உயர பறக்க ஆசை
கொள்வேன்..............
எல்லையற்ற விசும்பை
அடைய எத்தனிக்கும்
எல்லா நிலைகளிலும்
ஏதோ ஒர் புதினமாய்
என்னை உணர்வதுண்டு!!!!.........
சில வேளைகளில்
வரம்பு மீறியும்
போவதுண்டு!!!!!!!...........
இருப்பினும் பதியாகிய
என் பாங்கன்
என் நிலையை
உணர்த்தி
விடுவான்..................
மேலெழுவதும்
வீழ்வதும்
காலத்தின்
கரங்களில் விட்டு
என் நீண்ட
யாத்திரை தொடரும்...
நன்றி - இரா.விக்னேஷ்வரன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments